முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதித்து விட்டது: ரகுராம் ராஜன் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டு பாதித்து விட்டது. தற்போதுள்ள 7 சதவீத வளர்ச்சி நாட்டின் தேவைகளை நிறைவேற்றப் போதாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.அமெரிக்காவின் பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

அதில் பங்கேற்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது:-கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவேகமாக இருந்தது. ஆனால், பண மதிப்பிழப்பு மற்றும், ஜி.எஸ்.டி வரி என அடுத்தடுத்து அதிர்ச்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதித்தது. சர்வதேச அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருந்த நிலையில், இந்த இரு அதிர்ச்சியால் வளர்ச்சி திடீரென சரிந்தது.25 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது மிக மிக வலிமையானது. கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின் கடந்த 25 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி என்பது வியப்புக்குரியது.

இந்தியா திறந்தவெளி பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. உலகப் பொருளாதாரம் வளர்ந்தால், இந்தியப் பொருளாதாரமும் அதிகமாக வளரும். ஆனால், 2017-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் வளர்ந்தது, ஆனால், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய சிக்கலில் இருந்து மீண்டு, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் சுறுசுறுப்படைந்து செல்லும் போது, பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து சிக்கலைக் கொடுத்தது. வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழல் தடுக்கப்பட்டு களையப்பட வேண்டும். இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து