முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் நில நடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கட்ச் : குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று  முன்தினம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுக்கோலில் 3.1 என்ற அளவிற்கு பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த லேசான நிலஅதிர்வினால் உயிரிழப்போ, சேதமோ, பொருள் இழப்புகளோ ஏற்படவில்லை. மதியம் 12.57 மணியளவில் கட்ச் மாவட்டத்திலிருந்து 14 கி.மீ.க்கு அப்பால் பச்சாவ் பகுதியில் வடமேற்கு திசையை மையப்புள்ளியாக கொண்டு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக காந்தி நகர் வானிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்தனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்பம் மற்றும் நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து