முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் ஓய்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை,அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய முன்னாள் வீரர் முனாப் பட்டேல் அறிவித்துள்ளார்.கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முனாப், 13 டெஸ்ட், 70 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் நாட்டுக்காக ஆடியுள்ளார்.கடந்த 2011-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் கடைசியாக விளையாடி இருந்தார் முனாப். ஓய்வு பெறுவதற்கு சிறப்பு காரணம் எதுவுமில்லை. உடல்தகுதி ஓரே மாதிரி இல்லை. அதே நேரத்தில் இளம் வீரர்கள் தங்கள் திறமையை காண்பிக்க காத்துள்ளனர். உள்ளூர் போட்டிகளில் மும்பை, மகராஷ்டிரா, பரோடா அணிகளிலும், ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான், மும்பை, குஜராத் அணிகளிலும் அவர் விளையாடினார். தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சி அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து