முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை வரவேற்ற கேரள அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கையும் எடுத்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மறு சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் முறையிட்டதை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஏற்க மறுத்து 13-ம் தேதி இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் இன்று பிற்கலில் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஐயப்ப பக்தர்களிடையே எழுந்துள்ளது. மண்டல பூஜை நடை திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இது குறித்து இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து