முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த ஆண்களும், பெண்களும் சபரிமலைக்கு செல்லக் கூடாது அது புலிகளுக்கான இடம் என்கிறார் ஆர்வலர் அச்சுதன்

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கோழிக்கோடு,சபரிமலைக்கு எந்த ஆணும் செல்லக் கூடாது, எந்தப் பெண்ணும் செல்லக் கூடாது. அது புலிகளுக்கான இடம். அங்குப் புலிகளை வாழ விடுங்கள் என்று சூழியல் ஆர்வலர் ஏ.அச்சுதன் வலியுறுத்தியுள்ளார்.கோழிக்கோடு நகரில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஏ.அச்சுதன் பங்கேற்று பேசியதாவது, சபரிமலைக்கு ஆண்களும் செல்லக் கூடாது, பெண்களும் செல்லக் கூடாது. சபரிமலை என்பது புலிகள் வாழுமிடம். அதைப் புலிகளுக்காக விட்டு விடுங்கள். நாம் சாலைகளையும், வீடுகளையும் கட்டமைத்தல் குறித்துத்தான் அதிகமாக ஆலோசிக்கிறோம். ஆனால், சுற்றுச்சூழலை மறுகட்டமைப்பு செய்வதைப் பற்றி நாம் மிகவும் அரிதாகவே ஆலோசிக்கிறோம்.சபரிமலை குறித்த ஆய்வில் பங்கேற்றிருந்தேன். ஆய்வு குறித்த அறிக்கையையும் நாங்கள் அரசிடம் அளித்திருக்கிறோம். சபரிமலையில் இன்னும் அதிகமான அளவுக்கு வளர்ச்சிப்பணிகளை செயற்கையாக மேற்கொண்டால், பாறைகளையும், மரங்களையும் அகற்ற வேண்டியது இருக்கும். இது இயற்கையை நாம் தொந்தரவு செய்வது போன்றதாக அமையும். இதனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய நிலச்சரிவைச் சந்தித்து, ஒட்டுமொத்தமாக சபரிமலையை நாம் இழக்க வேண்டியதுவரும் என்று எச்சரித்துள்ளோம். இவ்வாறு அச்சுதன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து