முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

புது டெல்லி,சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனினும் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். அப்போது இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் 48-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 23-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அமர்வு முன்பு மறுஆய்வு மனுக்கள் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறியதாவது....சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கும். இதுபோலவே 3 ரிட் பெட்டிஷன்களும், மறுசீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும். எனினும் முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் உள்ளது. அதற்கு இடைக்கால தடை ஏதும் இல்லை. தற்போதைய நிலைப்படி சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து