முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்  பகுதி மூன்று மற்றும் வைகை பூர்வீக பாசனப் பகுதி இரண்டில் உள்ள 5 கண்மாய்களுக்கு இன்று முதல் 21-ம் தேதி வரை உள்ள 7 நாட்களுக்கு 1,525 மில்லியன் கனஅடியும், இதர வைகை பூர்வீக பாசனப்பகுதி இரண்டுக்கு 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 4 நாட்களுக்கு 631 மில்லியன்கனஅடியும், பகுதி ஒன்றை சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு 69 மில்லியன் கன அடி, விரகனூர் மதகணையில் வழங்கவும், இதர வைகை பூர்வீக பாசனப் பகுதி ஒன்றுக்கு 348 மில்லியன் கன அடி தண்ணீரை பகுதி ஒன்றில் உள்ள நிலையூர் கால்வாயில் தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கும் சேர்த்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன்கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து