முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

சாக்ரமண்டோ : கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்னிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கலிபோர்னியா மாகாணத்தில் வடக்கே உள்ள பேரடைஸ் உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ கடந்த வாரம் ஏற்பட்டது. இந்தக் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 50 ஆக அதிகரித்துள்ளது. தீயில் கருகிய உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை நான் பெரும் பேரிடர் இழப்பாக அறிவித்திருக்கிறேன். நான் உங்களுடன் எப்போதும் இருப்பேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவன் துணை இருப்பார் என்று வேண்டி கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.  இந்த நிலையில் காட்டுத் தீ பருவ நிலை மாற்றம் காரணமாக இத்தகைய தீவிர விளைவை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து