முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

டூப்லின் : ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அயர்லாந்து அருகே பறந்து கொண்டு இருந்த போது இந்த பறக்கும் தட்டுகளை பார்த்ததாக விமானிகள் கூறியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் வானத்தில் நான்கு விமானங்கள் பறந்து இருக்கிறது. இந்த நான்கு விமானத்தை சேர்ந்த விமானிகளும், அந்த பறக்கும் தட்டுகளை பார்த்ததாக வாக்குமூலம் அளித்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது மிகவும் வேகமாக சென்றதாக கூறியுள்ளனர். மேலும் இதன் வெளிச்சம் மிக மிக அதிகமாக இருந்தது என்றுள்ளனர். மூன்று விமானிகள், பறக்கும் தட்டுகளை பார்த்ததாக கூறியுள்ளனர். ஒரு விமானி, நான் ஓட்டிய விமானத்திற்கு அருகே மெதுவாக வந்து விட்டு பின் வேகமாக பறந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக சில ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். விமானத்தின் உள்ளே இருக்கும் கருப்பு பெட்டியின் ஆடியோ பதிவு செய்யும் கருவியில் இதற்கான ஆதாரம் உள்ளது என்கிறார்கள். அந்த பறக்கும் தட்டு அந்த விமானம் அருகே சென்ற போது பெரிய அளவில் சத்தம் எழுப்பியுள்ளது. இந்த வித்தியாசமான சத்தம் அந்த ஆடியோ கருவியில் பதிவாகி உள்ளதாகவும், அதை ஆதாரமாக காட்ட போவதாகவும் கூறியுள்ளனர். இதுவரை இப்படி ஒரு சாதனத்தை தங்கள் வாழ்நாளில் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த பறக்கும் தட்டு ஹைபர் சோனிக் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து