முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக் கடலில் உருவான கஜா புயல் நவம்பர் இன்று மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி...

கஜா புயல் இன்று கரையை கடக்கவிருப்பதால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டநிர்வாகங்கள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று கஜா புயல் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வேகம் குறைந்து மிகக் குறைந்த வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

தென்மேற்காக நகர்ந்து...

வங்கக் கடலில் கிழக்கு திசையில் சென்னையில் இருந்து 520 கி.மீ. தூரத்திலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு - வடகிழக்காக 620 கி.மீ. தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இதுவரை மேற்கு வடமேற்காக நகர்ந்து வந்த கஜா புயல் தற்போது மேற்கு தென்மேற்காக நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 11 மணிக்குள் தீவிரப் புயலாக வலுவடைந்து, இன்று மாலை தமிழகத்தின் பாம்பன் - கடலூர் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் முன் வலுவிழந்து புயலாக மாறி கரையை கடக்கும்.

மாலை கரையை...

இது கரையைக் கடந்த பிறகு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக அரபிக் கடலை நவம்பர் 17-ம் தேதி சென்றடையும். கஜா புயல் மணிக்கு 7 கி.மீ., 6 கி.மீ., 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது அதன் நகர்வு வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. ஆக உள்ளது. முன்னதாக இன்று முற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கஜா புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு...

முன்னதாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

“தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் தற்போது 10 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது இன்று மாலை முதல் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக்கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்று  கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஒரு சில நேரம் 100 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும். மீனவர்கள் இன்று வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து