முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

 புது டெல்லி : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்குமாறு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுத்துவிட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்குமாறு அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி வலியுறுத்திய வழக்கறிஞரிடம், ஜனவரி 22-ம் தேதி வரை காத்திருக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன்பு ஜனவரி 22-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதே சமயம், பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதே கோரிக்கையை தேசிய ஐயப்ப பக்தைகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்ததைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து