முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரமேரூரில் 10-ஆம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டெடுப்பு!

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

உத்தரமேரூர் : உத்தரமேரூர் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே நல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராம வயல்வெளியில் கடந்த 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால சோழர்களால் வழிபடப்பட்ட பிரம்மசாஸ்தா எனும் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பாலாஜி தலைமையிலான குழுவினர் அண்மைக்காலமாக, உத்தரமேரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 8ஆம் நூற்றாண்டு கொற்றவை, 11-ஆம் நூற்றாண்டு சூரியன், 13-16 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தலைப்பலி வீரன் எனும் அரிகண்டம் சிலைகள் கண்டறியப்பட்டன. தற்போது, உத்தரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நல்லூர் கிராமத்தில் அக்குழு கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது, விவசாயி ஒருவரின் வயல்வெளிப் பகுதியில் சிவலிங்கம், நந்தி, ஓர் சிலை இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து