எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கி பொன்விழா ஆண்டு நினைவு அஞ்சல் அட்டையும் முதல்வர் வெளியிட்டார்.
தைராய்டு பரிசோதனை...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, எழும்பூர், குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, நவீன இருதய சிகிச்சை மையத்தின் தோரண நுழைவு வாயில், நவீன இருதய சிகிச்சை அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமர்வதற்கான நவீன ஒலி-ஒளி அரங்கம், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், ஒரு கோடி ரூபாய் செலவில் பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பொன்விழா ஆண்டுக்கான நினைவு அஞ்சல் அட்டையையும் வெளியிட்டார்.
பல திட்டங்கள்...
அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை தமிழக மக்களுக்கு அளிக்கும் பொருட்டு, சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தாய்சேய் நல சேவைகளை வழங்குதல், 30 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒவ்வொரு வட்டாரத்திலும் துவக்குதல், தேவைக்கேற்ப புதிய ரத்த வங்கிகளை ஏற்படுத்துதல், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்துதல், 104 மருத்துவ தகவல் சேவை திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூடுதல் நிதி உதவியுடன் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி, அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், தாய்ப்பால் வங்கி போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
837 படுக்கைகளுடன்...
சென்னை, எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை 1968-ம் ஆண்டு 250 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 837 படுக்கைகளுடன் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் எம்.டி. (குழந்தைகள் நலம்), எம்.சி.எச்., டி.எம் (நியோநேடாலஜி) மற்றும் டி.சி.எச். ஆகிய மருத்துவப் படிப்புகளில் ஆண்டுதோறும் 69 மாணவர்கள் படித்து பட்டம் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுள்ள குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, இம்மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியதோடு, 90.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புற நோயாளிகள் பிரிவுக் கட்டிடத்தை கடந்த ஆண்டு கட்டித் தந்துள்ளது.
180 குழந்தைகளுக்கு...
இந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் இருதயத் துறை, ஒரு முன்னோடியான துறையாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் கொண்ட முதல் துறையும் இதுவே ஆகும். இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 12,000 குழந்தைகள் இருதய புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதயத் துறையில் உள்ள இரண்டு பிரிவுகளிலும் 20 படுக்கைகள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு இருதய உள்ளூடுருவி ஆய்வகம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 180 குழந்தைகளுக்கு இருதய உள்ளூடுருவி மூலம் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நவீன ஒலி-ஒளி அரங்கம்
இந்த நவீன இருதய சிகிச்சை மையத்திற்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தோரண நுழைவு வாயில்; 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன இருதய சிகிச்சை அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 250 நபர்கள் வரை அமர்வதற்கும், குழந்தைகளுக்கான பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகள், குழந்தைகள் கண்டு களிக்க கார்ட்டூன் படங்கள் மற்றும் நல்லொழுக்கம் பேணும் குறும்படங்கள் ஆகியவற்றை கண்டு களிக்கும் வகையிலும் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன ஒலி-ஒளி அரங்கம்; 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை என மொத்தம் 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
நினைவு அஞ்சல் அட்டை
மேலும், ஒரு கோடி ரூபாய் செலவில் மரபியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகை செய்யும், பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனைத் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இதுமட்டுமின்றி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்து 2018-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொன்விழா ஆண்டு நினைவு அஞ்சல் அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.