முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்;டம் நடைபெற்றது.
திண்டுக்கல் - நத்தம் ரோடு டி.எஸ்.எல். மகாலில் மாவட்ட கழக செயலாளரும் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், நத்தம். வேடசந்தூர், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம். பழனி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இருவரும் ஆலோசனை வழங்கி பேசுகையில், தேர்தல் எப்போது வந்தாலும் அதற்கு முன்னதாக நாம் தயாராக இருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஏற்கனவே பல தேர்தல்களை கண்ட கழக நிர்வாகிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதே வேளையில் தேர்தல் களப் பணியாற்றும் போது முழு முனைப்போடு செயல்பட்டு கழகம் மகத்தான வெற்றி பெற அரும்பாடு பட வேண்டும் என்று பேசினர்.
நிகழ்ச்சியில் நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், கொடைக்கானல் நகர கழக செயலாளர் ஸ்ரீதர்,. ஒன்றிய கழக செயலாளர்கள் ஆத்தூர் பி.கே.டி.நடராஜன், ரெட்டியார்சத்திரம் ராஜ்மோகன், ஒட்டன்சத்திரம் பி.பாலசுப்பிரமணி, நகர செயலாளர் உதயம் ராமசாமி, தி;ண்டுக்கல் ஜெயசீலன், பழனி நகர கழக செயலாளர் முருகானந்தம், நத்தம் ஷாஜகான், தொப்பம்பட்டி கிட்டுசாமி, சாணார்பட்டி ராமராசு, ஆத்தூர் முன்னாள் சேர்மன் கோபி, அகரம் பேருர் கழக செயலாளர் சக்திவேல், மாவட்ட பேரலை இணை செயலாளர் சோனா சுருளிவேல், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், சேசு, வார்டு செயலாளர்கள் ராஜ்மோகன், வீரமார்பன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்ட கழக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து