முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் உள்ள அம்மா உணவகத்துக்கு நேரில் சென்று அங்கு அமைச்சர்களுடன் சேர்ந்து இட்லியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

நாடு முழுவதும் நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு சென்றனர்.

அம்மா உணவகத்தை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் அமைச்சர்களுடன் அங்கு இட்லியை வாங்கி ரசித்து ருசித்து சாப்பிட்டார். தொடர்ந்து உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் தெரிவித்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து