முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா விவகாரத்தில் மீண்டும் தவறு செய்ய மாட்டோம்: அமெரிக்கா

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,வடகொரியா விவகாரத்தில் முந்தைய நிர்வாகங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியா - பசுபிக் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் மைக் பென்ஸ் கலந்து கொண்டார். இதில் தென்கொரிய அதிபர் மூன் ஜே உன்னை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் கிம் - டிரம்ப் மீண்டும் சந்திப்பது குறித்து கேட்ப்கப்பட்டது. இதற்கு மைக் பென்ஸ் பதிலளிக்கும் போது, அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சந்திப்பு அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெறும். நாங்கள் வடகொரியா விவகாரத்தில் முந்தைய நிர்வாகங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை. கடந்த பத்து வருடங்களாக வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுகின்றன. பொருளாதாரத்துக்கு வலுவான ஆதரவுகள் வலுக்கும்போது வாக்குறுதிகள் மீறப்படுகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து