முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை கண்டிப்பாக சபரிமலை போவேன் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் சவால்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை,நானும் என்னுடன் ஐந்து பெண்களும் வரும் 17-ம் தேதி சபரிமலைக்கு கண்டிப்பாக போவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது என்று பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கூறியுள்ளார்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அது முதல் பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், 2 மாத கால மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக நாளை 17-ம் தேதி சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.அந்த நாளில்தான் கோயிலுக்குள் நுழைவேன் என்று மராட்டியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், தன்னுடன் மேலும் 5 பெண்கள் வரவிருப்பதாகவும், அவர்கள் அனைவருமே தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சபரிமலை என்றில்லாமல் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் திருப்தி தேசாய், 17-ம் தேதியன்று ஐயப்பனை தரிசிக்காமல் ஊர் திரும்ப மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது, சபரிமலைக்கு நாங்கள் வரும் அன்றைய தினம் கேரள அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இ-மெயில் மூலம் கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறேன். அந்த கடிதத்தில் தாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதேபோல, பிரதமருக்கும் இதுபோன்று பாதுகாப்பு கேட்டு கடிதம் இ-மெயில் மூலம் அனுப்பி உள்ளேன். எப்படி இருந்தாலும் சரி 17-ம் தேதி கோயிலுக்குள் கண்டிப்பாக போவேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து