முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டிய ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் நன்றி

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கஜா புயலை முன்னிட்டு தமிழக மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கஜா புயல் கடுமையாக இருந்தாலும் மீனவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 333 மீனவக் கிராமங்களில் படகுகளுக்கு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.  புயலால் சில நாட்டுப் படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. மீனவர்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவக் கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று பாதிப்பை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பர். தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எதிர்க்கட்சிகளே பாராட்டும் வகையில் அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து