முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் சேத விவரங்கள் குறித்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்: தமிழக அரசு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்  கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.  கஜா புயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் குறித்தும், தற்போது கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும் விளக்கமாக மத்திய உள்துறை அமைச்சரிடம் முதல்வர் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 471  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 82,000 பொதுமக்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் உட்பட செய்யப்பட்டு வரும் அனைத்து நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.  கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து