முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் அரசு உத்தரவாதம் தரவில்லை: ரபேல் விஷயத்தில் மேலும் ஒரு குளறுபடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியானதன் மூலம், அந்த ஒப்பந்தம் தொடர்பான மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்  விசாரணைக்கு வந்தபோது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசிடம் உத்தரவாதம் பெறப்படவில்லை என்று மனுதாரர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிரான்ஸ் அரசிடம் உத்தரவாதம் பெறப்படவில்லை என்றாலும், அதற்கு இணையான உறுதிமொழி கடிதம் பெறப்பட்டுள்ளது என்றார்.

இதை விமர்சித்து ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்தப் புதிய தகவல் மூலம், அந்த ஒப்பந்தம் தொடர்பான மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரான்ஸ் அரசு அளித்த ஒரு கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, ரபேல் ஒப்பந்தத்தை இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் என்று எப்படிக் கூற முடியும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து