எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீர் செய்து, அனைத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
கஜா புயல் வங்கக் கடலில் நிலை கொண்டிருப்பதாகவும், இது நாகப்பட்டினம் மற்றும் சென்னை இடையே கரையைக் கடக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் 11.11.2018 அன்று அறிவிப்பினை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, எனது தலைமையில் 12.11.2018 அன்று, தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் புயல் தாக்கம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் நான் அறிவுரை வழங்கினேன்.
எனது உத்தரவின் பேரில், அமைச்சர் பெருமக்கள், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், புயல், வெள்ளம் ஆகியவற்றை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுப் பணிகளை உடனடியாக துவக்கினர். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் முழுமையான ஆயத்த நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புயலினால் ஏற்படும் சேதங்களை குறைக்கும் பொருட்டும், இடர்ப்பாடுகளை தணிக்கும் பொருட்டும், மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த ஏழு குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். பல்துறையைச் சேர்ந்த மண்டல குழுக்கள், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட 200 தன்னார்வலர்களும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு தயார் நிலையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் (15.11.2018) முதல் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , வருவாய்த் துறை அரசு முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களும் புயலின் தாக்கத்தையும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது கள அலுவலர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் மூலம் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டனர். கஜா புயல் 15.11.2018 அன்று இரவு நாகப்பட்டினம் அருகில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் 15.11.2018 அன்று அதிகாலை 2.30 மணிக்கு தெரிவித்ததையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்த 81,948 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, 471 புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், பாய், போர்வை ஆகியவைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஜெனரேட்டர் வசதிகளும் இந்த முகாம்களில் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக் கூடிய நோய்களை தடுக்கும் விதமாக 216 மருத்துவ முகாம்களும், நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப, கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொற்றுநோய் தடுப்புக் குழுக்களும், உணவு பாதுகாப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் காரணமாக ஏற்படக்கூடிய மின் விநியோக பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே 7,000 மின் கம்பங்கள் இம் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பப்பட்டன. மேலும், கூடுதலாக பிற மாவட்டங்களிலிருந்து, மின் பணியாளர்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், முதற்கட்ட அறிக்கையின் படி சுமார் 13,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை சீர்செய்து, மின் விநியோகம் இயல்பு நிலைக்கு கொண்டு வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கஜா புயல் கரையைக் கடந்ததன் காரணமாக முதற்கட்ட அறிக்கையின் படி சுமார் 5,000 மரங்கள் வேருடன் சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மின் ரம்பங்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் போக்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது. சாய்ந்த மரங்களை திரும்ப நடக்கூடிய சாத்திக்கூறு உள்ள இடங்களில் அவற்றை திரும்ப நடுவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
புயலால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து கணக்கீடு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வருவாய்த் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக, புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த கால்நடைகள், பாதிப்படைந்த வீடுகள், பயிர்கள், மரங்கள் மற்றும் சேதமடைந்த மீன் பிடி படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுத் துறை செயலாளர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் ஷகீல் அக்தர், திருவாரூர் மாவட்டத்திற்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் தாமரைக் கண்ணன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் ரவி மற்றும் பாதிப்படைந்த ரயில்வே பகுதிகளை சீரமைக்க கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோரை நியமனம் செய்து நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஏற்கனவே, எனது உத்தரவின் பேரில், அமைச்சர்கள் எம்.சி சம்பத், ஆர். காமராஜ், ஒ.எஸ் மணியன், சி. விஜயபாஸ்கர், ஆர். துரைக்கண்ணு மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இரவு, பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீர் செய்து, அனைத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சி சீனிவாசன், பி தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார் மற்றும் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் எனது உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.