எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் என் தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வடகிழக்கு பருவமழை காலத்தில் எவ்வாறு பணிகள் மேற்கொள்வது என்பதையெல்லாம் அதிகாரிகளிடத்திலே தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
கஜா புயலினால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளில் மழை பெய்தது. சுமார் அதிகாலை 2.30 மணியளவிலே 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், நாகை மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதுவரை 11 பேர் இறந்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.
கேள்வி: சேத மதிப்பு எவ்வளவு?
பதில்: சேத மதிப்பு இப்பொழுது கணக்கிட ஆணையிடப்பட்டு, அதனுடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் ஏற்கனவே கஜா புயலின் வருகை குறித்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புயல் வருவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்றவர்கள், குடிசையில் வசிக்கின்றவர்கள் எல்லாம் பாதுகாப்பாக 471 முகாம்களில் சுமார் 82,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே உயிர்சேதமும், மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லாமலும் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.
கேள்வி: முகாம்கள் எவ்வளவு நாட்கள் செயல்படும்?
பதில்: இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கின்றது. ஆகவே, அவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி: 12,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பாதிப்படைந்திருக்கிறது, அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பதில்: ஏற்கனவே கஜா புயலால் மின்கம்பங்கள் ஏதாவது சாய்ந்தால் அதை மாற்றியமைப்பதற்கு, சுமார் 7000 மின்கம்பங்கள் அங்கேயே இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது எத்தனை மின்கம்பங்கள் கஜா புயலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பது கணக்கிடப்பட்டு, அதையெல்லாம் சரி செய்வதற்குண்டான நடவடிக்கையை மின்சார வாரியம் எடுத்து வருகின்றது.
கேள்வி: மீனவர்களுக்கான பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?
பதில்: அதுவும் கணக்கிடப்பட்டு வருகிறது. இன்று(நேற்று) காலைதான் புயல் வந்திருக்கிறது. மீன்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளெல்லாம் சென்றிருக்கிறார்கள். கரையோரமாக வைக்கப்பட்டிருந்த படகுகள் சில பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அதை மீன்வளத் துறையும், வருவாய்த் துறையும் சேர்ந்து, எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பதையெல்லாம் கணக்கிட்டு, அரசுக்கு அறிக்கை கொடுத்த பிறகு, அதற்கான நிவாரணம் மீனவ மக்களுக்கு வழங்கப்படும்.
கேள்வி: உயிரிழந்த குடும்பங்களுக்கும், படுகாயம் அடைந்த குடும்பங்களுக்கும் என்ன நிவாரணம் அளிக்கப் போகிறீர்கள்?
பதில்: தற்போது வரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக மாவட்ட ஆட்சியாளர் மூலமாக அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
கேள்வி: இதை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு மத்திய அரசிற்கு தாக்கல் செய்யப் போகிறீர்களா?
பதில்: சேதங்கள் பற்றி கணக்கிட்டபின்தான், அரசு மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.அதுமட்டுமல்லாமல், அங்கே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக நடமாடுகின்ற 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
அதே நேரத்தில், கஜா புயலால் அதிக மரங்கள் சாய்ந்திருக்கின்றன. அப்படி சாய்ந்த மரங்களையெல்லாம் அகற்றுகின்ற பணியில் அதிகாரிகள் அதிகாலையிலிருந்தே ஈடுபட்டிருக்கின்றார்கள். அதற்கு தேவையான நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாக, சாலையில் சாய்ந்திருக்கின்ற மரங்களையெல்லாம் அறுத்து, அதை அப்புறப்படுத்துகின்ற பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல, பொதுப்பணித் துறையில் இருக்கின்ற அதிகாரிகளும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கே உள்ள குளங்கள், ஏரிகளை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.
கேள்வி: ஏற்கனவே அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்றார்கள், முதலமைச்சருடைய பயணம் என்றைக்கு தொடங்கும்?
பதில்: ஏற்கனவே அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து பணிகளை மேற்கெள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலே அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஏற்கனவே, அம்மாவினுடைய அரசு கஜா புயலால் கடற்கரை ஓரங்களில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக 3 நாட்களுக்கு முன்பே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் அந்தப் பணிகளெல்லாம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கேள்வி: நிவாரணம் என்பது தலாவா? அல்லது ஒரு குடும்பத்திற்கா?
பதில்: ஒரு குடும்பத்திற்கு.
கேள்வி: இறந்தவர்களுக்கு 10 லட்சம் என்று கூறினீர்கள், காயமடைந்தவர்களுக்கு?
பதில்: படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும்.
கேள்வி: பாதிக்கப்பட்டவர்களை எப்பொழுது பார்க்கப் போகிறீர்கள்?
பதில்: பாதிக்கப்பட்டவர்கள் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கணக்கிடப்பட்டபின் நான் சென்றால்தான் அது முறையாக அவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும். ஏனென்றால், ஊடகத்தின் மூலமாகத்தான் நாங்களே எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது, பணிகள் எவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய வருவாய்த் துறை அமைச்சர் சகோதரர் உதயகுமார் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி நேரடியாக கடலோர மாவட்ட ஆட்சியாளர்களிடத்தில் தொடர்பு கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய பணிகள் விவரங்களையும் உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். நாங்களும் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: நீங்கள் நேரில் சென்று பார்க்கவில்லையா? மேலும், நாகப்பட்டினம் இரயில்வே ஸ்டேஷனில் மிகுந்த சேதம் ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனரே?
பதில்: பார்வையிடுவேன். இந்த இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு வடகிழக்கு பருவமழையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றோம். அந்தந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கே முகாமிட்டு, அமைச்சர் பெருமக்களும் முகாமிட்டு, எங்களால் நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அங்கேயே தங்கி தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான உதவிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்யும். கஜா புயல் மிகவும் தீவிரமாகவுள்ளதால், ஒரு சில பகுதிகளில் அதிக சேதாரம் ஏற்பட்டுள்ளது.
கேள்வி: மத்திய அரசிடம் நிதி கேட்பீர்களா?
பதில்: இப்பொழுதுதான் புயலின் வேகம் குறைந்துகொண்டு வருகிறது. மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்துள்ளது. கடல் சீற்றத்தினால் கடலோர கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாக சொல்கின்றார்கள். அதை நேரில் சென்று பார்த்து பிறகு தான் அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள், எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று அரசால் கணக்கிடப்பட்டு அதற்குத் தக்கவாறு மத்திய அரசிடம் நிதி உதவி கேட்கப்படும்.
கேள்வி: உள் மாவட்டங்களில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
பதில்: உள் மாவட்டங்களைப் பொறுத்தவரை மிதமான மழை தான் பொழிகிறது. சில இடங்களில் கனமழை பொழிகிறது. மிகக் கனமான மழை பொழிந்தால்தான் பாதிப்பிற்குள்ளாவார்கள். வானிலை ஆராய்ச்சி மையம் மழையை மிதமான மழை, கனமான மழை மற்றும் மிகக் கனமான மழை என்று மூன்று விதமாக வரையறுத்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே, மத்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலின் அடிப்படையில், பாதிக்காத மாவட்டங்களுக்கு தேவையான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்புக்குள்ளாகின்ற மாவட்டங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது, மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தேவையான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: ஏற்கனவே வர்தா புயல் பாதிப்பிற்கே மத்திய அரசிடமிருந்து நிதி முழுமையாக கிடைக்கவில்லை. இதற்கு நிதி கிடைக்குமா?
பதில்: இந்த மத்திய அரசும் கொடுக்கவில்லை. இதற்கு முன்பிருந்த மத்திய அரசும், புயலால் ஏற்பட்ட சேதங்கள் முழுவதற்கும் தேவையான நிதியை வழங்கினார்களோ! இல்லையோ! எனக்குத் தெரிந்து இல்லை. நாமும் சேத மதிப்பீடு கொடுத்தோம். அதற்கு குறிப்பிட்ட அளவுதான் நிதி ஒதுக்கினார்கள், மாநில அரசின் நிதியில்தான் நாம் செலவழித்துக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிலத்தடி நீர் உறியப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு சொல்லியிருக்கின்றார்கள். அதை ஏற்பதும், ஏற்காததும் தமிழக அரசின் பொறுப்பென்று சொல்லியிருக்கின்றார்களே?
பதில்: ஏற்கனவே மாசுக்கட்டுப்பாட்டுத் துறை மூலமாக ஆங்காங்கே மாதிரி காற்று, தண்ணீர் எடுக்கப்பட்டு செய்த ஆய்வின் அடிப்படையில் தான் நாம் அறிக்கை கொடுத்திருக்கின்றோம். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதின் காரணமாக அதிகமாக, விவரமாக, முழுதாக எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி: வேதாரண்யம் பகுதி எந்தத் தொடர்பும் இல்லாமல், தனித் தீவாக மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்: நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மின்சார வாரியத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, சேதங்களை மதிப்பிட்டு, அதற்கேற்றவாறு, அதற்குத் தேவையான பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு முழு வீச்சுடன் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளளபடும், நிவாரணங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் துவக்கம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் நேற்று துவங்கியது.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி
18 Mar 2024சென்னை : ம.தி.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.