முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமாலை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு? அமெரிக்க உளவு அமைப்பு சந்தேகம்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பத்திரிகையாளர் ஜமான் கஷோகியை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் மொகமதுபின் சல்மான் உத்தரவிட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ கருதுகிறது.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ தனது இந்த கருத்தை அமெரிக்க அரசாங்கத்தின் பிற பிரிவுகளான காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற துறைகளிடத்திலும் தெரிவித்திருப்பதாக சி.ஐ.ஏ.-வுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் சல்மானுக்கும் கஷோகி கொலைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று சவுதி மறுத்து வந்தது. தற்போது சி.ஐ.ஏ.வின் இந்த கணிப்பு அதனைப் பொய்யாக்கியுள்ளது. சி.ஐ.ஏ-வின் இந்த உளவுத்தகவலை முதன் முதலில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. ஆனால் இது குறித்து வெள்ளை மாளிகையும், அமெரிக்க அரசுத் துறையும் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டன.  இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த மதிப்பீடு உறுதியாகத் தவறானது என்று மறுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து