முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலாத்காரம் செய்ய வந்த வாலிபர்களை தெருவில் புரட்டி எடுத்த புரட்சிப் பெண்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கான்பூர்,உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஈட்டா என்ற பகுதி அருகே உள்ள கிராமத்துக்கு இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து போய் கொண்டிருந்தார். அப்போது அவரை 2 ஆண்கள் கேலி கிண்டல் செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் அதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தார். அமைதியாக போவதை கவனித்த 2 பேரும் இளம்பெண்ணை திடீர் என வழிமறித்து அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளனர்.

அதுவரை அமைதியாக இருந்த அந்த பெண்,  2 பேரையும் பிடித்து இழுத்து  நடுரோட்டிலேயே அடிக்க ஆரம்பித்து விட்டார். இதனை அந்த இளைஞர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இருவரையும் மாறி மாறி தெருவிலேயே கைகளாலும், கால்களாலும் புரட்டி புரட்டி எடுத்தார். அது மட்டுமல்லாது, தான் அணிந்திருந்த செருப்பால் இளைஞர்களை மேலும் வெளுத்தெடுத்தார்.  இதையடுத்து அந்த இளைஞர்கள் கெஞ்சியும் அந்த பெண் விடவில்லை. எல்லோரும் வேடிக்கை பார்க்க பார்க்க இளைஞர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அடி தடி காட்சிகள் எல்லாம் முடிந்த பிறகு ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார்கள். இளைஞர்களை சிறைபிடித்து கட்டி போட்ட மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தார்கள். விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு கைது செய்து அழைத்து சென்றனர்.  பலாத்காரம் செய்ய வந்த 2 பேரை இளம்பெண் தெருவில் புரட்டி புரட்டி செருப்பால் அடித்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து