முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளர் போட்டி

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால்,மத்தியப் பிரேதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளராக பாத்திமா ரசூல் சித்திக் போட்டியிடுகிறார்.

பாத்திமாவின் தந்தை ரசூல் சித்திக் முன்னாள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் என்பதால், பாத்திமாவை காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது பா.ஜ.க.கடந்த 1980 மற்றும் 1990-களில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசில் இருமுறை அமைச்சராக இருந்தவர் ரசூல் சித்திக். காங்கிரஸ் தலைவர் மாதராவ் சிந்தியாவுக்கு மிகவும் நெருங்கியவராக ரசூல் சித்திக் இருந்தார். ஆனால், ரசூல் சித்திக்கை கட்சியில் ஓரம் கட்டி விட்டு, அரீப் அக்குயில் என்பவர் வந்தார். அவரைத் தோற்கடிக்கும் வகையில் தற்போது பாத்திமா களமிறங்கியுள்ளார்.

இதுகுறித்து பாத்திமா ரசூல் சித்திக் கூறியதாவது:என்னுடைய தந்தையின் இறப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு அந்நியப்பட்டு விட்டது. எங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான குடும்பம். ஆனால், நான் பா.ஜ.கவில் சேர முடிவு செய்த போது அனைவரும் வியப்பாகப் பார்த்தனர். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வை அணுகிய போது, எனக்கென சில கோரிக்கைகள் இருந்தன. ஆதலால், அதை விட்டு வெளியே வந்து என்னால் போட்டியிட முடியவில்லை. ஆனால், இந்த முறை எனக்கு பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் சிவராஜ் சவுகான் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். என்னுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முதல்வர் சிவராஜ் சவுகான், என்னுடைய வேட்பு மனுத்தாக்கலின் போது உடன் இருந்தார்.நான் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும் போது, மக்கள் என் தந்தை செய்த செயல்கள், நல்ல காரியங்கள், நலத்திட்டங்கள், மருத்துவமனை கட்டிக் கொடுத்தது ஆகியவற்றைக் கூறி பாராட்டுகிறார்கள். என் தந்தையைக் கட்சியில் இருந்து ஓரம் கட்டி, வீழ்த்திய அரீப் அக்குயிலை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். இவ்வாறு பாத்திமா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து