முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை, அமராவதி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோரப் பகுதிகளுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து வைகை அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமராவதி அணையின் கொள்ளளவு 83 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து