முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

திருவண்ணாமலை,திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வருகிற 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள்.அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் இருந்து வருகிற 22-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 24-ம் தேதி (சனிக்கிழமை) வரை திருவண்ணாமலைக்கு 2,609 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து