முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் பகுதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

திருவாரூர்,கஜா புயலினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குடி, தென்வராயநல்லூர், திருநெய்ப்பேர், குன்னியூர், மாவூர் ஆகிய பகுதிகளில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை பார்வையிட்டு தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சர் காமராஜ் நிவாரண பொருட்களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் உடனிருந்தார்.கஜா புயலின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளை அமைச்சர் காமராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு, அங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். திருவாரூர் வட்டம் மாங்குடி சாலையில் குடியிருப்பு வீட்டின் மீது மரம் சாய்ந்துள்ளதை பார்வையிட்டு சாய்ந்த மரத்தினை அப்புறப்படுத்தும் பணிகளை விரைவுப்படுத்த பணியாள்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து தென்னவராயநல்லூர், திருநெய்பேர், குன்னியூர் ஆகிய பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை  சந்தித்து ஆறுதல் கூறி மதிய உணவு வழங்கினார். பின்னர் மாவூர் சாலையில் குடியிருப்பு வீடுகள் மீது சாய்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து