முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னைக்கு கனமழை வாய்ப்பா? வானிலை இயக்குனர் பாலசந்திரன் பதில்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னைக்கு மிதமான மழை மட்டுமே இருக்கும். புயல் வர வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரங்களில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகரும். நாளை  20-ம் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் புதுவை கரையை ஒட்டி நிலைகொள்ளத் தொடங்கும். இதன் காரணமாக இன்று 19-ம் தேதி கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும். பின்னர் (நாளை, நாளை மறுநாள்)20, 21 தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும். கனமழையைப் பொறுத்தவரை (இன்று)19-ம் தேதி வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். (நாளை)20-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழைப் பெய்யக் கூடும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

19-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும், 20-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும். பின்னர் 19-20 தேதிகளில் மிதமான மழைப் பெய்யக்கூடும்.இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதா? புயலாக வர வாய்ப்புண்டா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பாலச்சந்திரன், தற்போதைய நிலையில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. புயலாக வர வாய்ப்பில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து