முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்காக சிறப்பு யாகம் நடத்திய சந்திரசேகர ராவ்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு அடுத்த கட்ட பிரசாரத்தை துவக்குவதற்கு முன் அம்மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது பண்ணை வீட்டில் சிறப்பு யாகங்கள் நடத்தினார்.

தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிரசாரத்தை துவக்குவதற்கு முன் தனது பண்ணை வீட்டில் சந்திரசேகரராவ் சிறப்பு யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார். பிரபல புரோகதர்களை வைத்து ராஜ ஷியாமளா யாகம், சண்டி யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்பட்டுள்ளது. தனது சொத்துக்கள் பலவற்றிற்கும் சந்திரசேகர ராவ் பூஜை போட்டுள்ளார். இந்த யாகத்தில் சந்திரசேக ராவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.நேற்று முன்தினம் துவங்கிய இந்த சிறப்பு யாகங்கள், பூஜைகள் நேற்று நிறைவடைந்துள்ளன.தெலுங்கானா மாநிலம் வளம் பெறவும், மக்களின் நன்மைக்காகவும், துவங்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும் இந்த சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து