முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு ரயில் வந்த போது தண்டவாளத்திற்கு கீழே படுத்து சாதுர்யமாக உயிர் பிழைத்த வாலிபர்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அனந்தபுர்,எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் வந்த போது தண்டவாளத்திற்கு கீழே படுத்து சாதுர்யமாக ஆந்திராவை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிர்பிழைத்துள்ளார்.

அனந்த்புர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு பயணி, தண்டவாளத்தில் ரயில் வருவதைப் பார்க்காமல், அதில் குதித்துக் கடந்து செல்ல முயன்றார். அவரைத் தடுக்க அருகில் இருந்த பயணிகள் கூக்குரல் எழுப்பியும் அதை அவர் காதில் வாங்காததால் இந்த சம்பவம் நேரிட்டது.ஆனால், ரயில் மிக அருகில் வந்ததைப் பார்த்த அந்த நபர், சாதுர்யமாக காலை நீட்டி தண்டவாளத்தில் படுத்தே விட்டார். அவர் மீது சரக்கு ரயில் வேகமாக கடந்து சென்றது. ரயில் முழுவதுமாக தன்னைக் கடந்து சென்ற பிறகு தூங்கி எழுந்தது போல கை கால்களை அசைத்தபடி எழுந்து நின்றார். இதனை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் அவர் எழுந்து நின்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.எங்கள் தங்கம் படத்தில் நான் செத்துப் பொழச்சவன்டா, எமனை  பார்த்து சிரிச்சவன்டா என்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பாடுவார். அந்த பாடல் இந்த வாலிபருக்கும் பொருந்தும் போலும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து