முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வழக்கை விசாரிக்கும் அதிகாரி இடமாற்றத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,சி.பி.ஐ சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரி நாக்பூருக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில், ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த சி.பி.ஐ அதிகாரி மனீஷ் குமார் சின்ஹா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரி இந்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் எஸ் கே கௌல் மற்றும் கே எம் ஜோசப் அமர்விடம் குறிப்பிட்டார். தனக்கு அரசு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை இதே அமர்வு இன்று  விசாரிக்கிறது. இந்த வழக்கு விசாரணையுடன் இணைத்து தனது வழக்கையும் விசாரிக்குமாறு சி.பி.ஐ அதிகாரி மனீஷ் குமார் சின்ஹா கேட்டுக்கொண்டார். நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து