முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதிப்பு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,புயல் பாதித்த மாவட்டங்களில் மக்கள் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த வரும் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புயல் பாதித்த மாவட்டங்களில் மக்கள் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த வரும் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் 15-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி 30-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து