முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது: பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பாராட்டு

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று திருமங்கலம் நகரில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 2013ம் ஆண்டு பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று விட்டு திரும்பிடும் வழியில்,கள்ளிக்குடி அருகேயுள்ள வேப்பங்குளம் கிராமத்தில் நடைபெற்ற இருபிரிவினருக்கு இடையிலான மோதலில் கைது செய்யப்பட்டிருந்த தங்களது சமுதாய மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற பா.ஜ.க நிர்வாகி பி.டி.அரசகுமார்,பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முருகன்ஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இதனிடையே வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார்,பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முருகன்ஜி ஆகியோரை விடுதலை செய்து திருமங்கலம் நீதித்துறைநடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் கூறுகையில்: கஜா புயலினால் நாகப்பட்டினம்,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,திருச்சி,ராமநாதபுரம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அப்போது தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. தற்போது கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. அமைச்சர்களின் மேற்பார்வையில் அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.அதே போல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.விரைவில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு தெரிவிக்கப்பட்டு நிவாரண நிதி வழங்கிட பா.ஜ.க நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ஜ.க மற்றும் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள்,வழக்கறிஞர்கள் ஜெயபிரகாஷ்,கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர். -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து