எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க மற்றும் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியா ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துணை முதல்வர், அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு அறிவித்துள்ளார். அதன்படி புயலால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீட்டுக்கு தலா ரூ.10 ஆயிரமும், மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-கஜா புயல் தமிழ்நாட்டில் கரையை கடக்கும் என்று 11.11.2018 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து 12.11.2018 அன்றே தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நான் அறிவுரை வழங்கினேன். எனது உத்தரவின் பேரில் அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் புயல், கன மழை ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். இதன் காரணமாக பெருமளவு உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
பெரும் பாதிப்புகள் “கஜா” புயல் 16.11.18 அன்று 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றினாலும், கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைத்து, இயல்பு நிலை திரும்பிட பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
514 முகாம்கள்... “கஜா” புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கவும் பணிகள் குறித்து இன்று (நேற்று) தலைமைச்செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர், அரசு துறை செயலாளர்கள், வருவாய் நிருவாக ஆணையர், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் என் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. “கஜா” புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 514 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 2,51,674 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர, முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டியும், சேலையும் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், கூடுதலாக 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மீனவ குடும்பங்களுக்கு...முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள், வீடுகளை இழந்தவர்கள், மீன்பிடி கலன்கள்/ வல்லம்/ கட்டுமரம் சேதமடைந்ததனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உடனடி வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5,000 ரூபாயும், துணிமணிகள், பாத்திர பண்டங்கள் ஆகியவை வாங்க குடும்பம் ஒன்றுக்கு 3,800/-ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் தங்கியுள்ள பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
420 மருத்துவ முகாம்கள்....பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 420 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1249 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை 97,825 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
தலா ரூ.10 லட்சம்.... ‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 46 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க ஏற்கனவே நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், 20 காளை மாடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 19 கன்றுகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், 1181 ஆடுகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 14,986 கோழி மற்றும் பறவைகளுக்கு தலா 100 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
சேதமடைந்த குடிசை...“கஜா” புயலினால் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 2018 டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, நவம்பர் மாதமே அதாவது தற்போதே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். “கஜா” புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும், வழங்க உத்தரவிட்டுள்ளேன். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும்.
ஊராட்சித்துறைக்கு...மேலும், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு 25 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறைக்கு 25 கோடி ரூபாய்; பொதுப்பணித்துறைக்கு 10 கோடி ரூபாய், சுகாதாரத்துறைக்கு 2 கோடி ரூபாய், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு 5 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாக துறைக்கு 5 கோடி ரூபாய், பேரூராட்சிகளின் இயக்குநரகத்திற்கு 5 கோடி ரூபாய், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 5 கோடி ரூபாய், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு 2.5 கோடி ரூபாய், சிவகங்கை, இராமநாதபுரம், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
88,102 ஹெக்டேர்... “கஜா” புயலின் கோரத்தாண்டவத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண்மை மற்றும் தோட்டகலைப் பயிர்கள் பாதிப்படைந்தது தெரியவந்துள்ளது. “கஜா” புயல் தாக்குதல் காரணமாக மேற்கூறிய 12 மாவட்டங்களில் 32,706 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள், 30,100 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள், 7,636 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், 4,747 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, 4,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காபி பயிர், பயறு, பருத்தி, முந்திரி மற்றும் பலா மரங்கள் போன்றவையும் 3,253 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி பயிர்களும், 500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களும், 945 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மா மரங்களும், 2,707 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்களும் சேதம் அடைந்துள்ளன.
ரூ.2,64,600 நிவாரணம்....தென்னை பயிருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாய் வழங்கவும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாய் வழங்கவும், ஆக மொத்தம் ஒரு மரத்திற்கு 1100 ரூபாய் வழங்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர, மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் பெறுவர். மேலும், சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
நெல் பயிர்களுக்கு...நெல் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும். கரும்பு, வாழை, காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும். இப்பயிர்களை மறுசாகுபடி செய்ய ஆகும் செலவில் 40 முதல் 50 சதவீத மானியம் வழங்கப்படும். முந்திரி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 18,000 ரூபாயும், அவற்றை வெட்டி அகற்றிட மரத்திற்கு 500 ரூபாயும், மறுசாகுபடி செய்ய 40 முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமாக ரூபாய் 75,000 வரையும் மறுசாகுபடி செய்வதற்கு வழங்கப்படும்.
குடிநீர் விநியோகம்.... பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு பால் எளிதில் கிடைத்திட ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகம் செய்திடவும் உத்தரவிட்டுள்ளேன். குடிநீர் விநியோகத்தைப் பொறுத்தவரையில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட 184 நகர்ப்புற பகுதிகளில் 98 நகர்புற பகுதிகளிலும், பேரூராட்சிக்கு உட்பட்ட 270 வார்டுகளில் 252 வார்டுகளிலும், 7,248 ஊரக பகுதிகளில் 1,266 ஊரக பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர்கள் உதவியுடனும் மற்றும் லாரிகள் மூலமாகவும் தங்கு தடையின்றி மக்களுக்கு குடிநீர் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
77,000 மின்கம்பங்கள்... மேற்சொன்ன மாவட்டங்களில் “கஜா” புயலின் காரணமாக 86,702 மின் கம்பங்கள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. மின்சார விநியோகத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக மின்கம்பங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அனுப்பிட நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், சுமார் 77,000 மின்கம்பங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த 21,461 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர, பிற மாவட்டங்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் கூடுதலாக பணியமர்த்த உத்தரவிட்டுள்ளேன்.
ரூ.200 கோடி ஒதுக்கீடு.....மின்சார கட்டமைப்புக்கு ஏற்பட்ட இது போன்ற பேரழிவை சீர்செய்ய அதிக காலம் ஆகும் என்ற போதிலும் எனது தலைமையிலான அரசின் இடைவிடாத முயற்சியிலும், “கஜா” புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் விரைவில் மின் வசதி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளை மின்வாரியம் விரைந்து முடித்திட முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மீன்பிடி படகுகளுக்கு... “கஜா” புயல் காரணமாக, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலுர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட கணக்கீட்டின்படி கட்டுமரங்கள், எப்.ஆர்.பி படகுகள், விசைப் படகுகள் போன்ற சுமார் 4,844 மீன்பிடி படகுகள், 5,550 மீன் வலைகள் மற்றும் 5,727 படகுகளின் எஞ்சின்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20,000 ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த எப்.ஆர்.பி படகுகள் மற்றும் வலைகளுக்கு 85,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த எப்.ஆர்.பி படகுகள் மற்றும் வலைகளுக்கு 30,000 ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், வலைகள் மட்டுமே சேதம் அடைந்திருந்தால் 10,000 ரூபாயும், எஞ்சின் பழுது நீக்கம் செய்ய 5,000 ரூபாயும் வழங்கப்படும்.
ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.... “கஜா” புயல் காரணமாக, மேற்கூறிய மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததை சீர்செய்ய 600 ஜே.சி.பி. இயந்திரங்கள், 141 மின்சார மரவெட்டிகள், 60 லாரிகள் மற்றும் 65 டிராக்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 2,000 பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் என முக்கிய சாலைகள் அனைத்திலும் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, மக்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு நிதி உதவி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 1,000 கோடி ரூபாய் உடனடியாக விடுவித்திட உத்தரவிட்டுள்ளேன்.
மத்திய அரசுக்கு...“கஜா” புயல் கடுமையான மற்றும் பெரிய அளவிலான சேதாரங்களை உண்டாக்கியுள்ளது. லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், சாலைகள், தென்னை மரங்கள், வேளாண் பயிர்கள், குடிநீர் திட்டங்கள், வீடுகள், பொது கட்டிடங்கள் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவினை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியினை அளிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.
நேரில் இன்று ஆய்வு.... “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட மேற்படி மாவட்டங்களுக்கு 20.11.2018 அன்று (இன்று) நான் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன். அமைச்சர் பெருமக்கள் மேற்கூறிய மாவட்டங்களில் தங்கியிருந்து நிவாரண உதவிகளை வழங்குவார்கள். தற்போது தமிழ்நாடு அரசால் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.