முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

சிகாகோ : அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவரும், மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

மெர்ஸி மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் மருந்தாளுனர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரும் உயிரிழந்தார்.

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர், குற்றவாளியை சுட்டுக் கொன்றனர். மருத்துவமனை வளாகத்தில் குற்றவாளிக்கும், மற்றொரு பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து