முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஷோகி படுகொலை விவகாரத்தில் 18 சவுதி அதிகாரிகளுக்கு ஜெர்மனி தடை

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

துபாய் : செய்தியாளர் கஷோகி படுகொலை விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த 18 அதிகாரிகளுக்குத் தடை விதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கூறியதாவது:-

துருக்கியிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 18 பேருக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து