முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் : ஒரேநாள் இரவில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியாது: ஐகோர்ட் கிளை

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஒரேநாள் இரவில்  மேற்கொள்ள முடியாது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

மனுத்தாக்கல்...

வழக்கறிஞர் அழகுமணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். உயிரிழப்புக்கு ரூ.25 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும்  இந்த மனுவை அவசர வழக்காக  உடனடியாக விசாரிக்க கோரியிருந்தார். மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிற்பகலில் இந்த வழக்கை விசாரித்தது.

ஐகோர்ட் கேள்வி ?

பின்னர் அந்த மனுமீதான விசாரணையில், கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் என்ன உதவிகள் கேட்டுள்ளன ? என்று நீதிபதிகள் கேட்டனர். மேலும், போர்க்கால அடிப்படையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியது.  கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பணிகளை ஒரேநாள் இரவில் எப்படி மேற்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட் நீதிபதி, நாங்கள் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் செய்து வரும் மீட்பு பணிகளை தொலைகாட்சியில் பார்த்தோம் என்றும் தெரிவித்தனர். மேலும், வசதிகள் மக்களுக்கு சென்றதா என்பதை உறுதி செய்து நாளை அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து