எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த வாரம் கஜா புயலினால் மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலையில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் கஜா புயலினால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. அதிலும் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய வட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் விளைநிலங்கள், மா, தென்னை, பப்பாளி, வாழை, பாகற்காய் போன்றவைகள் முற்றிலும் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் இழப்பை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை இணைந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மனித இழப்பு இருநபர்களுக்கும், கால்நடைகள் இழப்புகள் மற்றும் வீடுகள் சேதத்திற்கும் உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டதுடன் மேலும் வீடுகள் சேதம் குறித்து அவ்வப்போது வரும் கணக்கிற்கேற்ப நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த புயல் அதிகளவில் மின்இணைப்புக்களை பாதிப்படையச் செய்துள்ளது என்து குறிப்பிடத்தக்கதாகும். நமது மாவட்டத்தில் 1100 மின்கம்பங்களுக்கு மேல் பாதிப்படைந்துள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து சுமார் 300-க்கு மேற்பட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். நகர்ப்பகுதி மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு ஓரிரு நாளில் முழுமையாக வழங்கப்பட்டுவிடும். அதேபோல் புயல் பாதிக்கப்பட்ட காலக்கட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் அளவில் மின்இணைப்பு இல்லாத இடங்களில் ஜெனரேட்டரின் மூலமாக மோட்டார் இயக்கி தேவையான தண்ணீர் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்பட்டு வந்தன. அதிலும் ஜெனரேட்டர் வண்டி செல்லாத இடங்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. பொதுவாக மக்களுக்கான சிரமத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. அதற்காக மாவட்ட நிர்வாகத்தை அமைச்சர் என்ற முறையில் பாராட்டுகிறேன். மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நிலுவையிலுள்ள பணிகள் முழுமையாக நிறைவு பெறும்வகையில் செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக மின்வாரியத்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பிற்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினரும் உறுதுணையாக இருப்போம்;. அதேபோல் சேதமடைந்தவற்றை கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை முழுமையாக கிராமப்பகுதிகளுக்கு சென்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு ஒவ்வொருவரின் பொருள் இழப்பையும் தவறாமல் பதிவு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதில் உங்களது பங்கு மிகமிக முக்கியமானதாக இருக்க வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்; தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சின்னையன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், காரைக்குடி ஆவின் தலைவர் அசோகன், காரைக்குடி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.