முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் நகராட்சி முத்திரையின்றி விற்பனை செய்யப்பட்ட தரம் குறைந்த 500கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்:

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் நகராட்சி முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ தரம் குறைந்த ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருமங்கலம் நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆட்டிறைச்சிக் கடைகளில் தரம்குறைந்த ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இறைச்சிக்கடைகளில் ஆணையாளரின் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.அப்போது நகராட்சி சுகாதாரப்பிரிவின் முத்திரையின்றி இறைச்சிக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 500 கிலோ ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவற்றை திருமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா முன்னிலையில் பினாயில் ஊற்றி பின்னர் மண்ணில் புதைத்து அழித்தனர்.திருமங்கலம் நகராட்சி சுகாதாரப் பிரிவின் முறையான முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 500கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருமங்கலம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து