முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டெர்போல் புதிய தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் தேர்வு

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

துபாய்,இன்டெர்போல் அமைப்பின் புதிய தலைவராக தென் கொரியாவை சேர்ந்த கிம் ஜோங்-யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இன்டெர்போல் அமைப்பின் 194 உறுப்பு நாடுகளின் வருடாந்திர கூட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் இன்டெர்போல் தலைவராக, தற்போது அதன் இடைக்கால தலைவராக இருக்கும் கிம் ஜோங்-யாங் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இன்டெர்போல் துணைத் தலைவராக இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ப்ரோகோப்சுக், தலைவர் பதவியை பெற தீவிரம் காட்டினார். என்றாலும் ரஷ்ய அதிபர் புடினை விமர்சிப்பவர்களுக்கு எதிராக இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தக் கூடும் என்று மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவித்தன.

இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் கிம் ஜோங்-யாங் தேர்வு செய்யப்பட்டார்.இன்டெர்போல் தலைவராக இருந்த மெங் ஹாங்வே கடந்த செப்டம்பர் மாதம் தனது தாய் நாடான சீனா சென்றிருந்த போது, அங்கு காணாமல் போனார். பிறகு லஞ்சப் புகாரின் பேரில் மெங் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் சீனா கூறியது. இந்நிலையில் மெங் ஹாங்வேயின் எஞ்சிய பதவிக் காலமான 2 ஆண்டுகளுக்கு கிம் ஜோங்-யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து