முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பில்லை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. தலைஞாயிறில் 21 செ.மீ., வலங்கைமானில் 19 செ.மீ., திருவாரூர் 17 செ.மீ, நீடாமங்கலம், குடவாசலில் 13 செ.மீ, மன்னார்குடி 11 செ.மீ, நன்னிலம் 10 செ.மீ, அரியலூரில்10 செ.மீ மழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டியில் 15 செ.மீ, நாகை 17 செ.மீ தரங்கம்பாடியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் இயல்பு அளவான 33 சதவிகிதத்தை விட குறைவாக 30 சதவிகித மழை மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் 45 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பில்லை. இனி வரும் நாட்களில் மழையளவு குறையும் என்று சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
இதனிடையே புயல் பாதித்த டெல்டா மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் அரசின் நிவாரண பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து