எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்த மத்திய குழுவினர் நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர். பின் முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு நடத்தினர். ஆய்வு குறித்த அறிக்கை 27-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மத்திய குழுவினர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமருடன் சந்திப்பு
கடந்த வியாழக் கிழமையன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அங்கு பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள உடனடி நிவாரணமாக ரூ.1500 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழுவை அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டானியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது.
முதல்வருடன் ஆலோசனை
இந்த குழுவினர் நேற்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். மத்திய குழுவினரிடம் கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து மத்திய குழுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார். முதல்வருடனான சந்திப்பில் மத்திய நிதித்துறை (செலவினங்கள்) ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத் துறையின் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குநர் பொறுப்பு பி.கே. ஸ்ரீவத்சவா, மத்திய ஊரக வளர்ச்சித் துறை துணைச் செயலாளர் மணிக் சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித் துறையின் முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குநர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளவரசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் கொ. சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ. சங்கர், வேளாண்மைத் துறை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் என்.சுப்பையன், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எம்.பக்தவத்சலம், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய பிறகு இந்த குழுவினர் நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டை புறப்பட்டு சென்றனர். பிறகு நேற்று மாலை 5.30 மணிக்கு புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். பின் மத்திய குழுவினர் நேற்று இரவு தஞ்சை சென்று அங்கு தங்கினர். இன்று காலை 7 மணி முதல் தஞ்சையிலும், மாலை 3.30 மணிக்கு திருவாரூரிலும் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை திங்கள் கிழமை காலை 7.30 மணிக்கு நாகை மற்றும் வேதாரண்யத்திலும், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
மத்திய அரசிடம் அறிக்கை...
முன்னதாக, முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர், மத்திய குழுவின் தலைவர் டானியல் ரிச்சர்டு நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், இன்று ஆய்வு நடத்துவதற்காக தமிழகத்திற்கு வந்திருக்கிறோம். வரும் 27-ம் தேதி எங்களது ஆய்வை முடித்து விட்டு டில்லி சென்ற பின்னர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய குழுவின் பயண விவரம்
* புதுக்கோட்டையில் நேற்று முதல் கட்ட ஆய்வை தொடங்குகின்றனர்.
* இன்று காலை 7 மணி முதல் 1 மணிவரை தஞ்சையில் ஆய்வு.
* இன்றஉ மாலை 3.30 மணிக்கு திருவாரூரில் ஆய்வு.
* நாளை காலை 7 மணி முதல் நாகை மற்றும் வேதாரண்யத்தில் ஆய்வு.
* தொடர்ந்து மாலை 2.30 மணிக்கு காரைக்கால் - புதுச்சேரி பகுதியில் ஆய்வு
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு