எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த கஜா புயலை டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தைரியமாக எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வுக் குழு தலைவரான மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள, மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நித்துறை ஆலோசகர் ஆர்.பி. கவுல், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் (பொ) பி.கே.ஸ்ரீவஸதவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மானிக் சந்திரா பண்டிட், மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்காள், நீர்வளத்துறை இயக்குநர் ஜே.ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் இளவரசன் ஆகியோரை கொண்ட மத்திய குழுவினர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, புதூர் கிராமத்தில், கஜா புயலால் சேதமடைந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீட்டினை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து சேத விவரம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், அப்பகுதி மக்களிடம் கால்நடைகள் சேதம் மற்றும் நெற்பயிர்களின் சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, புலவன்காடு கிராமத்தில், விவசாயி நாகராஜன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் புயலினால் முற்றிலும் அழிந்து போன தென்னந்தோப்பினை மத்திய குழுவினர் பார்வையிட்டு சேதம் குறித்து கேட்டறிந்தனர். ஒரத்தநாடு புதூர் கிராமத்திற்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்த போது அவர்களிடம் கிராம மக்கள் கண்ணீர் மல்க புயலால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அப்போது சில பெண்கள் திடீரென அதிகாரிகள் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதனர். சேத விவரங்களையும் கண்ணீர் மல்க விவசாயிகள் மத்திய குழுவிடம் தெரிவித்தனர்.
பின்னர், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, நெம்மேலி திப்பியக்குடி கிராமத்தில் துணை மின்நிலையங்கள் வழியாக 175 கிராமங்கள் பயனடையும் பிரதான 230/110 கே.வி. திறன் கொண்ட, கஜா புயலால் சேதமடைந்த துணை மின் நிலையத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும், பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை உளுர் கிராமத்தில், 282 ஹெக்டேர் தென்னை சாகுபடி சேதமடைந்துள்ளது. அப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக தென்னை பயிர் சாகுபடி செய்து வரும் மன்சூர் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதை பார்வையிட்ட மத்திய குழுவினர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணப் பயிர்களின் சேதம் குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மல்லிப்பட்டினம் கடலோர கிராமத்தில், மீன்பிடி துறைமுகம், மீனவர் குடியிருப்பு, ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் சேதம் குறித்து அப்பகுதியிலுள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும், 246 விசை படகுகள், 832 என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 147 கட்டுமர படகுகள், 1,428 மீன்பிடி வலைகள், 1440 இஞ்சின்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதை மத்திய குழுவினர் பார்வையிட்டு, அவற்றின் சேத விவரம் குறித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
முன்னதாக தஞ்சாவூர் தனியார் விடுதியில் தங்கியிருந்த மத்தியக் குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை புயலால் சேதமடைந்த வீடு, பயிர்கள், தென்னை, மின் மாற்றிகள், கால்நடைகள் குறித்த புகைப்படக் விளக்க காட்சி மற்றும் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்களை விளக்கி கூறினார்.
இதையடுத்து தஞ்சையில் இருந்து மாலையில் புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் சென்றனர். அங்கு புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 8 மணியளவில் திருவாரூரில் இருந்து நாகை புறப்பட்டு சென்றனர். இரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கிய மத்திய குழுவினர் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட உள்ளனர். இதையடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்கால் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு இரவு புதுச்சேரி செல்கின்றனர். முன்னதாக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் தென்னை மரங்கள் அதிகம் சேதமடைந்துள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு