முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் நிவாரணத்துக்கு ராஜீவ் கொலை கைதி நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான ரவிச்சந்திரன், கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம்  வழங்கினார்.

கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள்   பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில கிராமங்களில் பொதுமக்கள் வீடு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதியடைந்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதுமிருந்து நிவாரண உதவிகள் பணமாகவும், அத்தியாவசியப் பொருள்களாகவும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் கைதிகளுக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு, அந்த வேலைகளுக்கு நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், சிறையில் வேலை புரிந்தமைக்காக வழங்கப்பட்ட ஊதியத்தில் ரூ.5 ஆயிரத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக, முதல்வர் நிவாரண நிதிக்கு தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பி வைத்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து