முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் அருளானந்தம் என்பவர் வீட்டில் கடந்த சில வாரங்களுக்குமுன்பு 10 பவுன் நகை, ரூ.8 லட்சம் கொள்ளை போனது. மேலும் நாகல் நகர் உட்பட நத்தம் சாலையில் உள்ள 3 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த கொள்ளை குறித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். எஸ்.பி. சக்திவேல் உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனிடையே ரெட்டிபட்டியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக வந்த சிலரிடம் விசாரணை நடத்தினர். திண்டுக்கல் ராஜக்காபட்டியைச் சேர்ந்த ஜெயசீலன்(21), என்.ஜி.ஓ. காலனியைச்சேரந்த மணிகண்டபிரபு(20), வேடபட்டியைச் சேர்ந்த தவமணிராஜா(20), சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த குகனேஸ்வரன்(24) என்பவர் திருட்டு வண்டியில் வந்ததும் அவர்கள் திண்டுக்கல் நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவரவே அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
மேலும் இந்த கொள்ளையில் வேடபட்டியைச் சேர்ந்த சுரேஷ்பாபு(22), செந்தில்குமார்(25), பாரதிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன்(26) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து