முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு அருகே இராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு:

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி மீன்பிடிக்கவிடாமல் நேற்றுக்கு முன் தின இரவு விரட்டியடித்தனர்.
    ராமேஸ்வரம் பகுதியிலிருந்து  திங்கள் கிழமை காலையில் சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில்  1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு பகுதியில் இரவு மீன்பிடித்துகொண்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட இலங்கை ரோந்து  பிளாஸ்டிக் படகுகளில் இரவு பகலாக ரோந்துப்பணியில ;ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் அப்பகுதியில் திடீரென  50க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.பின்னர் மீனவர்களின் அருகாமையில் இலங்கை கடற்படையினர்  வந்து இப்பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து,துப்பாக்கியை வைத்து மிரட்டி மீன்பிடி சாதனங்களான மீன்பிடி வலைகள்,அடையாள பிளாஸ்டிக்குண்டுகள்,ரோப்புகள் உள்பட பல்வேறு பொருள்களை வெட்டி சேதப்படுத்தி கடலில் விட்டனர்.பின்னர் இப்பகுதியில் மீண்டும் மீன்பிடித்துக்கொண்டிருந்தால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்தனர்.அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து மீனவர்கள் படகுகளை ஓட்டிக்கொண்டு ராமேசுவரம் பகுதி்க்கு நேற்று அதிகாலையில் வந்து சேர்ந்தனர்.மேலும் இலங்கை கடற்படையினரின் அச்சுருத்ததால் படகுகளுக்கு தலா 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை 50க்கும் மேற்பட்ட பட
குகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

      கடல் அலையி்ல்  படகு சிக்கியதில் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு: 

 மண்டபம் பகுதியிலிருந்து  விண்சென்ட் என்பவரின் படகில் கார்மேகம்,மணி,முனித்துரை அந்தோணி,ராஜபாண்டி ஆகி. 5 மீனவர்களும் திங்கள் கிழமை காலையில் மீன்பிடிக்க சென்றனர்,இவர்கள் தொண்டி கடலோரப்பகுதியில் இரவு மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.அப்போது தீடீரென கடலில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் அலை வந்ததால் அவர்களின் படகு கடல் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கியது.அதன் பின்னர் படகிலிருந்து மீனவர்கள் 5 பேரும் டீசல் கேன்,குடிநீர் கேன்களை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்து கூட்டலிட்டு கிடந்துள்ளனர். இதையறிந்து அருகாமையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த சக மீனவர்கள் இவர்களின் அருகாமையில் சென்று அவர்களை உயிருடன் மீட்டனர்.பின்னர் 5 மீனவர்களையும் நேற்று காலையில் மண்டபம் பகுதிக்கு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து