முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோவிலில் முகேஷ் அம்பானி மகளின் திருமணம் பத்திரிக்கை வைத்து சுவாமி தரிசனம்.

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோவிலில் முகேஷ் அம்பானி  மகளின் திருமணம் பத்திரிக்கை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து நேற்று சுவாமி தரிசனம் செய்தார்,பின்னர்  திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை கட்டுவதற்கு நிதி தருவதாக திருக்கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

   உலக பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் முக்கிய திருக்கோவில் ராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோவில்.  இந்த கோவிலுக்கு இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்  முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர்கள் புறப்பட்டு  மண்டபம் கேம்ப் அருகில் உள்ள ஹெலிஹப்ட்டர் இறங்கு தளத்தில் சரியாக 12.35 மணிக்கு வருகை தந்தனர். அங்கிருந்து கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.அங்கு திருக்கோவில் சார்பாக இணை ஆணையர் மங்கையர்க்கரசி வரவேற்றார்.பின்னர் திருக்கோவிலின் குருக்கள் உதயகுமார் முகேஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானிக்கு மாழை அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கினார்கள். திருக்கோவிலின் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சன்னதியிலும் வரும் டிசம்பர் மாதம் 12ந் தேதி மும்பையில் நடைபெறவுள்ள முகேஷ் அம்பானி மூத்த மகள் ஈஷா வின் திருமண விழா அழைப்பிதழ்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் இராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் திருமண அழைப்பிதழ்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தார்.அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்,தீபாராதணை  வழிபாட்டில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.அங்கு குருக்கள்கள் மாழை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பின்னர்  அம்மன் சன்னதி முன்பு கொடிக்கம்பம் அமைந்துள்ள மண்டபத்தில் வைத்து திருக்கோவில் சார்பாக பிரசாதம் மற்றும் ராமலிங்க பிரிதிஷ்டை பொறிக்கப்பட்ட புகைப்படம் வழங்கப்பட்டன.பின்னர் முகேஷ் அம்பானி திருக்கோவில் முக்கிய பிரமுரர்கள் வருகை பதிவேட்டில் தனது வருகை குறித்து எழுதி கையெழுத்திட்டார்.  திருக்கோவில் சார்பாக திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரம் பாதியில் கட்டமால் இருப்பதால் அதை முடித்து  தரும்படி கோரிக்கை வைத்தார்.அதற்கு முகேஷ் அம்பானி மராமத்து பணிக்கு செலவாகும் நிதியினை தான்  வழங்குவதாக உறுதியளித்தார்.
    செய்தியாளர்கள் சந்திப்பில் முகேஷ் அம்பானி தெரிவித்தது:

  இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று வரும் 12ந் தேதி நடக்கவிருக்கும் எனது மூத்த மகளின் திருமணத்திற்க்கான அழைபிதழ்களை சுவாமி சன்னிதானத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்ததாகவும், இது என் குடும்பத்தில் நடைபெறும் முதல் திருமன விழா என்பதால் அனைவரது ஆசீர்வாதங்களும் கிடைகக் வேண்டி பிரத்தனை செய்தது  மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து