முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல்.வி. சி -43 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை தொடங்கியது.

இன்று செலுத்தப்படுகிறது

அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக் கோள்களையும், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக் கோளையும் ஏந்தி செல்கிறது. புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் மூலம் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதனுடன், வெளிநாடுகளுக்கான 30 சிறு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைகோள்களும், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைகோளும் இடம்பெறுகின்றன.

கவுன்ட் டவுன் தொடங்கியது

ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங்  செயற்கைகோளை புவி வட்டப் பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும், மற்ற 30 செயற்கைக் கோள்களை 504 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மேலாண்மை வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக 380 கிலோ எடைகொண்ட  ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து