எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை -மதுரை மாவட்டம், உலகத்தமிழ்ச் சங்கம் பெருந்திட்ட வளாகத்தில், உலகத்தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் வளம் குறித்து கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ள தமிழ்க்கூடல் எனும் வாரந்தோறும் தமிழாய்வுக் கூட்டத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சர் க.பாண்டியராசன் துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
யுனெஸ்கோவின் கணக்கெடுப்பின் படி, உலகமொழிகளில் தமிழ்மொழி 14ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்மொழியை 10ஆவது இடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை செயல்பட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள்;, மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் உலகத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பெற்று வந்த இளந்தமிழர் இலக்கியப் பட்டறை இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பெறும். இந்த இலக்கியப் பட்டறையானது தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திலும் நடத்தப்பெறும்.
தமிழ்க்கூடல் எனும் நிகழ்ச்சி வாரம் ஒரு முறை என இந்த வருடம் முழுவதும் 48 நிகழ்ச்சிகள் மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட பழங்குடியினர் பண்பாட்டு மையம் சார்பில் உதகையில் தற்பொழுது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறை மூலம் தோடர் இன பழங்குடியினர் குறித்த கலாச்சார ஆய்வு நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு தொடங்க இருக்கிறது. மொத்தம் 14500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் 4வது கட்ட அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விடும்.
முதற்கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மைசூரிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சென்னை தலைமைச்செயலக வளாகத்திலும், 4வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கீழடி அரசு பள்ளி வளாகத்திலும் முழு பாதுகாப்போடு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. சில பொருட்கள் கால அளவீடு செய்ய அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் கீழடியில் அகழ் வைப்பகம் அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை காந்தி மியூசியம், சென்னை கோட்டை அருங்காட்சியகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 36 அருங்காட்சியகங்களோடு புதிதாக அரியலூரில் விரைவில் டைனோசர் அருங்காட்சியகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் பொற்கரங்களால் தொடங்கி வைக்கப்படவிருக்கிறது. மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் பூம்புகார் சார்பாக ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் பழந்தமிழர் பண்பாட்டுக்கண்காட்சி, ஐந்திணை பூங்கா கண்காட்சி அமைய பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் வைக்கப்படவேண்டிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற தமிழ்க்கூடல் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மைகள், அதன் சிறப்புகள் குறித்து பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். இளைய சமுதாயத்தினர் நமது மொழியின் சிறப்பினை தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இது போன்ற தமிழாய்வு கூட்டங்களில் கலந்து கொண்டு நமது தமிழ் மொழியின் தொன்மைகளை பறை சாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
. முன்னதாக விழாவில் இரண்டாம் காலாண்டிதழ் கையேட்டினை தமிழ் ஆட்சிமொழி அமைச்சர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன் , உலகத்தமிழ்ச்சங்கம் இயக்குநர் (பொ.) முனைவர்.க.பசும்பொன் , மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மேலாண் பேராசிரியர் முனைவர்.கு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.